மொராக்கோ நாட்டின் மரகேச் தென்மேற்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மலேசிய அமைச்சர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 2,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைவதாகத் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
மொராக்கோ மக்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அவர் தனது
முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.








