Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மெய்க்காவலர் விவகாரம்: விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மெய்க்காவலர் விவகாரம்: விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

Share:

ஈப்போ, செப்டம்பர்.02-

பேரா மாநில அளவிலான தேசியத் தினக் கொண்டாட்டத்தின் போது, மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி திடீரென்று அணுகிய மாது ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் கவனக்குறைவு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்து ஆராய போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 41 வயதுடைய அந்த மாது எவ்வாறு சுல்தானை மின்னல் வேகத்தில் அணுக முடிந்தது என்பது தொடர்பில் போலீஸ்காரர்கள் மற்றும் மெய்க்காவலர்களின் அலட்சியமும், கவனக்குறைவும் நடந்துள்ளதா? என்பதை அறிய தற்போது விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

சுல்தானைக் கட்டியணைக்க அந்தப் பெண் முயற்சித்த போதிலும் அவர் பாதுகாவலர்களால் உடனடியாகத் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இதில் மெய்க்காவலர்களின் கவனக்குறைவான அம்சங்கள் இருந்துள்ளனவா? என்பது தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு