Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.21-

2027-ஆம் ஆண்டு முதல், 6 வயதுடைய மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும் புதிய திட்டத்திற்குத் தயாராகும் வகையில், பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப் போவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடங்கப்பட்ட 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

ஆரம்பக் கல்விக்குத் தயாராக இருக்கும் பிள்ளைகளை முன்கூட்டியே முதலாம் ஆண்டில் சேர்க்க இது பெற்றோருக்கு வாய்ப்பளிக்கிறது.

இந்தத் திட்டம் அவசர கதியில் செயல்படுத்தப்படாது. நோயறிதல் பரிசோதனையின் மூலம் பிள்ளைகளின் தயார்நிலை மற்றும் தகுதியை உறுதிச் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் விளக்கினார்.

ஆரம்பக் கல்வி 6 ஆண்டுகளும், இடைநிலைக் கல்வி 5 ஆண்டுகளும் என்ற தற்போதைய கல்வி அமைப்பு மாறாது. மாணவர்கள் தங்களின் மேல்நிலைக் கல்வியை 16 வயதில் நிறைவு செய்வார்கள் என்று ஃபாட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு