Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.21-

2027-ஆம் ஆண்டு முதல், 6 வயதுடைய மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும் புதிய திட்டத்திற்குத் தயாராகும் வகையில், பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப் போவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடங்கப்பட்ட 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

ஆரம்பக் கல்விக்குத் தயாராக இருக்கும் பிள்ளைகளை முன்கூட்டியே முதலாம் ஆண்டில் சேர்க்க இது பெற்றோருக்கு வாய்ப்பளிக்கிறது.

இந்தத் திட்டம் அவசர கதியில் செயல்படுத்தப்படாது. நோயறிதல் பரிசோதனையின் மூலம் பிள்ளைகளின் தயார்நிலை மற்றும் தகுதியை உறுதிச் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் விளக்கினார்.

ஆரம்பக் கல்வி 6 ஆண்டுகளும், இடைநிலைக் கல்வி 5 ஆண்டுகளும் என்ற தற்போதைய கல்வி அமைப்பு மாறாது. மாணவர்கள் தங்களின் மேல்நிலைக் கல்வியை 16 வயதில் நிறைவு செய்வார்கள் என்று ஃபாட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன