May 6, 2026
Thisaigal NewsYouTube
ஒரே திட்டத்தால் 800 மில்லியன் ரிங்கிட் சேமிப்பு! வெளிநாட்டினருக்கு ‘செக்’ வைத்த பிரதமர் அன்வாரின் பூடி95 திட்டம்!
தற்போதைய செய்திகள்

ஒரே திட்டத்தால் 800 மில்லியன் ரிங்கிட் சேமிப்பு! வெளிநாட்டினருக்கு ‘செக்’ வைத்த பிரதமர் அன்வாரின் பூடி95 திட்டம்!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.21-

பூடி95 திட்டத்தின் மூலம் வெறும் சில மாதங்களில் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் ரிங்கிட் மிச்சமாகியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மிக உற்சாகமாக அறிவித்துள்ளார். சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டினரும், கடத்தல் கும்பல்களும் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த மானியக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, உண்மையான மலேசியர்களுக்கு மட்டுமே பெட்ரோல் மானியம் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதிச் செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாகப் பல அரசாங்கங்கள் விவாதித்தும் செயல்படுத்தத் துணியாத இந்தத் துணிச்சலான மாற்றத்தை, ‘மடானி’ அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இவ்வாறு மிச்சப்படுத்தப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும், மக்களின் மருத்துவமனைகளை மேம்படுத்தவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும், ரஹ்மா பண உதவித் திட்டங்களுக்காகவும் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மலேசியர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரையிலான RON95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற மானிய விலையில் பெற்றுப் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்