Jan 21, 2026
Thisaigal NewsYouTube
என் கடிதத்திற்கு பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை-சனுசி சாடல்
தற்போதைய செய்திகள்

என் கடிதத்திற்கு பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை-சனுசி சாடல்

Share:

கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தான் இதுவரை இரண்டு கடிதங்களை பிரதமருக்கு அளித்து விட்ட நிலையில் அதற்கு எந்தவொரு பதில் கடிதமும் பிரதமர் தமக்கு அனுப்பவில்லை என்று சனுசி ,பிரதமர் அன்வார் இப்ராஹிமை சாடியுள்ளார்.

கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டம் குறித்து, பிரதமர் தனக்கு எல்லாம் தெரிந்தவை போல கருத்துரைப்பது சரியான போக்கு அல்ல என சனுசி கூறியுள்ளார். அந்தச் செயல் திட்டம் குறித்து பிரதமருக்கு நேரடி விளக்கம் தருவதற்காக தான் கடிதம் அனுப்பி விட்டதாக அவர் கூறினார்.

கெடா ஏரோட்ரோபோலிஸ் செயல்திட்டத்தில் கூலீம் விமான நிலையம் கட்டும் பணியும் அடங்கும் என்பதால் அந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சம் பற்றி எந்தவொரு விரிவன தகவலையும் பிரதமர் பெற வில்லை என குறிப்பிட்டு அந்த செயல்திட்டத்தை நிராகரிக்க அவர் வழி செய்கின்றார் என நினைப்பதாக சனுசி மேலும் கூறினார்.

7 ஆண்டுகளாக பல வல்லுனர்கள் வைத்து கட்டமைக்கப்பட்ட அந்த செயல்திட்டத்திற்கு கூட்டரசு அனுமதி வழங்கப்படாமல் இருப்பது சந்தேகத்தை வரவழிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு