Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை
தற்போதைய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

Share:

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய மலேசியா போன்ற தனது "நெருங்கிய நட்பு நாடுகளுடன்" ஈரான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் இந்த புதிய நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பதற்றம், எரிபொருள் விநியோகம் மற்றும் எண்ணெய் விலை உயர்வை பாதித்துள்ளது. இதைச் சமாளிக்க ஈரான் தூதரக ரீதியாகச் செயல்படுகிறது.

அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இது குறித்துப் பேசினர். எரிபொருள் நெருக்கடியைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.

உலகின் 20 விழுக்காடு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, தங்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்காத நாடுகளின் கப்பல்கள் ஈரானிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் என ஈரான் உறுதி அளித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

மாண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் மீது குற்றச்சாட்டு

மாண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் மீது குற்றச்சாட்டு