Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இனவெறி கருத்துகளை வெளியிட்ட நபர் விசாரிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

இனவெறி கருத்துகளை வெளியிட்ட நபர் விசாரிக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.02-

X தளத்தில் ஒரு நபர் இனவெறி கருத்துகளைப் பதிவேற்றியது தொடர்பாக தேசிய ஒற்றுமை அமைச்சர் அலுவலகம் மலேசிய தகவல் தொடர்பு – பல்லூடக ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு – பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் படி அந்த நபர் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறினார். மலேசிய மக்களின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பாதுகாக்க தேசிய ஒற்றுமை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. எனவே, ஒற்றுமையைச் சீர்குலைத்து வெறுப்பைத் தூண்டும் எந்தவோர் அறிக்கையும் அல்லது செயலும் ஏற்றுக் கொள்ளப்படாது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் அனைவரும் நெறிமுறையாக இருக்க வேண்டும் மற்றும் இன, மத பதற்றங்களைத் தூண்டும் எந்தவொரு செயலையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் X தளத்தில் தனது பதிவின் மூலம் நினைவுபடுத்தினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்