மேன்மை தங்கிய பேரா சுல்தானை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிள்ளானில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இன்று காலையில் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்துள்ளார். சுல்தானை நிந்திக்கும் தன்மையிலான விமர்சனங்களை பதிவிறக்கம் செய்வதற்கு அந்தப் பெண் பயன்படுத்திய கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக டத்தோ நூர்சியா குறிப்பிட்டார். 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்று இருப்பதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


