மேன்மை தங்கிய பேரா சுல்தானை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிள்ளானில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இன்று காலையில் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்துள்ளார். சுல்தானை நிந்திக்கும் தன்மையிலான விமர்சனங்களை பதிவிறக்கம் செய்வதற்கு அந்தப் பெண் பயன்படுத்திய கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக டத்தோ நூர்சியா குறிப்பிட்டார். 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்று இருப்பதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


