சிலாங்கூர், தாமான் புக்கிட் செர்டாங், பழைய இரும்புக்கடை வர்த்தகத் தளத்தில் கோணிப்பைக்குள் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் அப்பகுதியில் மீட்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் மூட்டையாக கட்டப்பட்டு அந்த உலோக மறுசுழற்சி வர்த்தக தளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.சவப்பிரசோதனைக்காக சடலம் மருத்துவமனையின் சவகிக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்


