சிலாங்கூர், தாமான் புக்கிட் செர்டாங், பழைய இரும்புக்கடை வர்த்தகத் தளத்தில் கோணிப்பைக்குள் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் அப்பகுதியில் மீட்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் மூட்டையாக கட்டப்பட்டு அந்த உலோக மறுசுழற்சி வர்த்தக தளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.சவப்பிரசோதனைக்காக சடலம் மருத்துவமனையின் சவகிக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


