May 15, 2026
Thisaigal NewsYouTube
எஸ்டிஆர் ரொக்க  நிதி உதவி: தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் 18 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

எஸ்டிஆர் ரொக்க நிதி உதவி: தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் 18 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா ரொக்க நிதி உதவியின் நான்காம் கட்ட பணப் பட்டுவாடா, நாளை அக்டோபர் 18 ஆம் தேதி சனிக்கிழமை முதல் வழங்கப்படவிருக்கிறது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியச் சமூகத்தினர், வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதையொட்டி, எஸ்டிஆர் ரொக்க நிதி உதவி, முன்கூட்டியே வழங்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்டிஆர் நிதி உதவி பெறுநர்களின் தகுதி வாரியாக வழங்கப்படும் இந்த நான்காம் கட்ட நிதி உதவியில் தலா 700 ரிங்கிட் வரை நிதி உதவியைப் பெறுவர். இதற்காக அரசாங்கம் 2 பில்லியன் அல்லது 200 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதி உதவியை அரசாங்கம் முன்கூட்டியே வழங்குவது மூலம் மலேசிய இந்திய சமூகத்தினர் தீபாவளித் திருநாளை மேலும் மகிழ்ச்சி பொங்க குதூகலமாகக் கொண்டாடுவர்கள் என்று அரசாங்கம் நம்புவதாக அந்த அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு