Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பத்திரிகையாளர் மன்றம் சொந்த நன்னெறிக் குறியீட்டை கொண்டிருக்கும்
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் மன்றம் சொந்த நன்னெறிக் குறியீட்டை கொண்டிருக்கும்

Share:

தகவல் இலாகாவினால் நேற்று தொடக்கி வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நன்னெறிக் குறியீடு, பத்திரிகையாளர் மன்றத்தினால் வரையப்பட்ட நன்னெறிக் குறீயீட்டுக்கு மாறுப்பட்டதாகும் என்பதை தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தகவல் இலாகா, கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து தனக்கென்று எப்போதுமே சொந்த நன்னெறிக்குறியீட்டை கொண்டு இருக்கிறது. இது புதிய ஆவணம் அல்ல என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் விளக்கினார்.

பத்திரிகையாளர் மன்றம் தனது உறுப்பின்ர்களுக்கான சொந்த குறியீட்டைக் கொண்டு இருக்கும். தகவல் இலாகா கொண்டுள்ள நன்னெறிக்குறியீடு, ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்களுக்கு உரியதாகும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.

1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறியீடானது, உண்மையில் MPI எனப்படும் மலேசிய பத்திரிகையாளர் கழகத்தினால் வெளியிடப்பட்டதாகும். அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் பத்திரிகையாளர் கழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதளிப்புக்காக அந்த குறியீடு அறிமுகப்பட்டது என்பதையும் தியோ நீ சிங் தெளிவுபடுத்தினார்.

நேற்று புத்ராஜெயாவில் மலேசிய ஊடகவியலாளர்களுக்கான நன்னெறிக்குறியீட்டு முறையை தொடர்புதுறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு