Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முகாம் மீது மரம் விழுந்தது: மாது பலி, மேலும் இருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

முகாம் மீது மரம் விழுந்தது: மாது பலி, மேலும் இருவர் படுகாயம்

Share:

பெந்தோங், செப்டம்பர்.19-

தாங்கள் முகாமிட்டு இருந்த கூடாரத்தின் மீது மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மாது ஒருவர் மரணமுற்ற வேளையில் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.50 மணியளவில் பெந்தோங், ஜண்டா பாயிக், பூலாவ் சந்தாப் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

15 மீட்டர் உயரமுள்ள மரத்தின் அடிப்பாகத்தில், கூடாரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயத்திற்கு ஆளான மாது, சம்பவ இடத்திலேயே மாண்டார். மேலும் இருவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 7.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் பொது உறவு அதிகாரி ஸுல்ஃபட்லி ஸாகாரியா தெரிவித்தார்.

இதில் ஓர் ஆடவரும், ஒரு சிறுவனும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெந்தோங் நிலையத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட வீரர்கள், கூடாரம் மீது விழுந்து கிடந்த மரத்தை அறுத்து, அகற்றிய பின்னர் காயமுற்ற இருவரையும், உயிரிழந்த பெண்ணின் உடலையும் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து