மலேசியா பல்லின மக்களை கொண்ட ஒரு நாடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சட்ட வல்லுநரும், முன்னாள் மேலவைத் தலைவருமான தான் ஶ்ரீ டாக்டர் ரைஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். மலேசியா பல்லின மக்களை கொண்ட நாடு என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நிறைய சட்ட ஒதுக்கீடுகள் உள்ளன என்பதையும் முன்னாள் தகவல் துறை அமைச்சருமான ராயிஸ் விளக்கினார்.
அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது விதியின் கீழ் மலேசிய மக்கள் குறிப்பாக ஒவ்வொருவரும் சட்ட ரீதியாக சமமாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தவிர, பல்லின மக்களின் பலதரப்பட்ட உரிமைகள் குறித்து அந்த சட்டத்தில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ராயிஸ் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள். முரூட், டயாக் மக்கள் என மலேசியர்களிடையே எவ்வித பேதமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் வகை செய்வதாக ராயிஸ் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 153 ஆவது விதி, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமையையும், சபா,சராவாவில் உள்ள பூர்வக்குடி மக்களின் நலன் சார்ந்த அம்சங்களையும் வலியுறுத்துவதாக உள்ளன என்று ராயிஸ் விளக்கினார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


