May 6, 2026
Thisaigal NewsYouTube
கழிவறையில் பதுங்கிய மலைப்பாம்பு: ஊழியர் காலில் கடித்துச் சென்ற அதிர்ச்சி!
தற்போதைய செய்திகள்

கழிவறையில் பதுங்கிய மலைப்பாம்பு: ஊழியர் காலில் கடித்துச் சென்ற அதிர்ச்சி!

Share:

ஷா ஆலாம், நவம்பர்.23-

ஷா ஆலமில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவர், கழிவறையைப் பயன்படுத்திய போது, அங்கிருந்த இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பால் காலில் கடிக்கப்பட்டார். இன்று பிற்பகல் 3.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு - மீட்புப் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படை தகவல் வெளியிட்டது.

விரைந்துச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், 23 வயதான அந்தப் பெண்ணின் காலில் இருந்து பாம்பின் பிடியை விடுவித்து, மேல் சிகிச்சைக்காக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இரண்டு மீட்டர் மலைப்பாம்பு பின்னர் பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்