Dec 28, 2025
Thisaigal NewsYouTube
1,000-க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளுக்குக் கருத்தடை: பேரா மாநில அரசு நிதியை இரு மடங்காக உயர்த்தியது
தற்போதைய செய்திகள்

1,000-க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளுக்குக் கருத்தடை: பேரா மாநில அரசு நிதியை இரு மடங்காக உயர்த்தியது

Share:

ஈப்போ, டிசம்பர்.28-

பேரா மாநிலத்தில் தெருவோரப் பிராணிகளின் எண்ணிக்கையை மாந்தநேய முறையில் கட்டுப்படுத்த, 'Perak Pawsitive' திட்டத்திற்கான நிதியை 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரிங்கிட்டாக மாநில அரசு உயர்த்தி உள்ளது. இந்த மெகா திட்டத்தின் மூலம் நாய் மற்றும் பூனைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதுடன், இதன் பலனைத் தைப்பிங், மஞ்சோங் போன்ற மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாண்டிரியா ங் உத்தரவிட்டுள்ளார்.

பிராணிகளுக்கு உணவளிப்பவர்களைக் கண்டறிந்து, தரவுகளைச் சேகரிக்க 'Feeder Mapping' எனும் புதிய இணையத்தளம் ஜனவரி 1 முதல் களமிறங்கவுள்ளது. இது தெருவோரப் பிராணிகள் பராமரிப்பில் ஒரு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும். ஈப்போ மாநகராட்சியில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவவுள்ள இந்தத் திட்டம், வெறும் நிதியுதவி மட்டுமல்லாமல் பிராணிகள் மீதான அன்பையும் பொறுப்பான வளர்ப்பையும் மக்களிடையே விதைக்கும் ஒரு உன்னத முயற்சியாகும் என சாண்டிரியா குறிப்பிட்டார்.

Related News