பெட்டாலிங் ஜெயா, ஜூலை 05-
ஜோகூர்,மூவாரில் கார் ஒன்றை ரோந்து போலீசார் துரத்திக்கொண்டு சென்ற சம்பவத்தில், கார் சாலையை விட்டு விலகி கால்வாய் ஓரத்தில் தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார்.
அதேவேளையில் அந்த காரை துரத்திச் சென்ற போலீஸ் ரோந்து காரும் சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ச்இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் மூவார்,ஜாலான் பென்டெங் , பரீட் கொங்சி 4 இல் நிகழ்ந்தது. இரு போலீஸ்காரர்களும் வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சென்ற Toyota Vios காரை துரத்திக்கொண்டு சென்ற போது இவ்விபத்து நிகழ்ந்தது.

போலீஸ்காரரின் உத்தரவுக்கு ஏற்ப அந்த கார் ஓட்டுநர், தனது காரை நிறுத்த தவறியதால் அக்காரை துரத்திக்கொண்டு போலீசார் சென்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ரைஸ் முக்ஹலிஸ் அஸ்ம்ன அஜிஸ் தெரிவித்தார்.







