Jul 3, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா ஆர்ப்பாட்டத்தில் மலேசிய மாணவர்கள் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியா ஆர்ப்பாட்டத்தில் மலேசிய மாணவர்கள் சம்பந்தப்படவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் மலேசிய மாணவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறுகிறார்.

இந்தோனேசியாவில் உள்ள மலேசியக் கல்வி அலுவலகம் மூலம் இது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக விஸ்மா புத்ராவுடன் இணைந்து உயர்க்கல்வி அமைச்சகம் தொடர்ந்து அந்நாட்டின் நிலைமையைக் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இந்தோனேசியாவில் 1,200க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை, இது போன்ற சம்பவங்களில் மலேசிய மாணவர்கள் ஈடுபட்டதாகத் தங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய இதர அதிகமான அனுகூலங்களை வழங்கும் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் பொதுமக்களும், மாணவர்களும் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் தலைநகர் ஜாகர்த்தாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கும் திட்டத்தை மக்கள் முழு வீச்சில் எதிர்த்து வருகின்றனர்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு