Jul 31, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு அமைச்சருக்கும்  இது தேனிலவுக்கான காலம் அல்ல பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

எந்தவொரு அமைச்சருக்கும் இது தேனிலவுக்கான காலம் அல்ல பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு எந்தவொரு அமைச்சரும் உச்சிக்குளிர்வதற்கு இது தேனிலவு காலம் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

தேனிலவைக் கொண்டாடுவதற்கு காலமும், நேரமும் கிடையாது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை கவனிப்பதிலும், அவற்றை தீர்ப்பதிலும் மட்டுமே அமைச்சர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது, மக்களின் பிரச்னையை கவனிப்பது, தேசத்தை வளப்படுத்துவது ஆகியவற்றில்தான் ஒவ்வொரு அமைச்சரின் சிந்தனையும், கவனமும் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நடைபெறக்கூடிய அமைச்சவைக்கூட்டத்தில் ஒவ்வொரு அமைச்சரின் பணித்தன்மை, அவர் சார்ந்த பணியாக்கம் மற்றும் அமைச்சின் செயலாக்கம் ஆகியவற்றை கேட்டறிவதில் மட்டுமே தாம் மிகுந்த அழுத்தம் கொடுக்கப் போவதாக தமது முகநூலில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News