Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் வாயை மூடும் முயற்சியாகும்
தற்போதைய செய்திகள்

மக்களின் வாயை மூடும் முயற்சியாகும்

Share:

நாட்டில் சமயம், இனம் மற்றம் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை யாரும் தொடக்கூடாது என்று அரசாங்கம் விதித்துள்ள தடையானது, மக்களின் வாயை மூடும் முயற்சியாகும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக தலைமையேற்பதற்கு முன்பு, பத்திரிகை சுதந்திரம், மனித உரிமை, பேச்சு சுதந்திரம், சீர்திருத்தம் என்று முழக்கமிட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராகனப் பின்னர் ஏன் இத்தகைய தடையை விதித்துள்ளார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்திற்கு வெளியே இருந்த போது ஒரு பேச்சு, அரசாங்கத்தில் இருக்கம் போது ஒரு பேச்சா? என்று வினவிய துன் மகாதீர், 3ஆர் என்பது மக்களின் வாயை மூடுவதற்கு கையாளப்படும் ஒரு தந்திரமாகும் என்று வர்ணித்துள்ளார்.

Related News