ஜோகூர், ஜூலை 09-
ஜோகூர், உளூ திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களின் பிரதான நுழைவாயில்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடம்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உலு திராம் போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் போன்று எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் இனி நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக உள்துறை அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சைபுடின் இதனை தெரிவித்துள்ளார்.








