Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

Share:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கவும், நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநில அரசு, சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

அக்கூட்டத்தில், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவது மற்றும் மாநில தொழில்துறைக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சிறப்புக் கூட்டமானது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் நடைபெறவுள்ள மாநில மந்திரி பெசார் மற்றும் தலைமை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும், திட்டங்கள் சரியான முறையில் மற்றும் திறம்பட செயல்படுத்தப்படுவதற்காக ஒரு சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அவை தொடர்பான கூட்டங்கள் வழக்கமாக நடைபெறும் என்றும் அமிருடின் ஷாரி தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை