Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தமது வாதத்தை தற்காத்தார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

தமது வாதத்தை தற்காத்தார் துன் மகாதீர்

Share:

மலேசியா ஒரு பல்லின மக்களை கொண்ட நாடு என்பதைவிட மலேசிய ஒரு மலாய் நாடு என்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென துன் மகாதீர் கூறியிருப்பது தொடர்பில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 27 ஆம் தேதி துன் மகாதீர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை போலீஸ் வாக்கு மூலத்திற்க்கு பிறகும் துன் மகாதீர் தமது முகநூலில் தற்காத்து பேசியுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டியே தமது வாதத்தை முன்வைத்ததாகவும் தவறாக எதனையும் தாம் வியாக்கியாணப் படுத்தவில்லை என்றும் துன் மகாதீர் தமது முகநூலில் விளக்கமளித்துள்ளார்.

Related News