Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சிறுவனைத் துன்புறுத்திய தாய் மற்றும் காதலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிறுவனைத் துன்புறுத்திய தாய் மற்றும் காதலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஜனவரி.16-

தமது 10 வயது மகனைப் பராமரிக்கத் தவறியதுடன் அந்த சிறுவனைத் துன்புறுத்தி காயம் விளைவித்ததாக அவனது தாயாரும், அவரின் காதலரும் இன்று சிரம்பானில் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

வேலையில்லாத 30 வயது பெண்மணியான டாயாங் நூர்ஷிடா, நீலாய் ஜாலான் தேசா பால்மாவிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2025 செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை தமது மகனைப் பராமரிக்கத் தவறியதுடன் துன்புறுத்திக் காயங்களை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்தப் பெண்மணியின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.

டாயாங் நூர்ஷிடாவின் காதலரான 22 வயது மஸ்ரான், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அதே இடத்தில் சிறுவனைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக மற்றொரு நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவரது கைப்பேசியில் நான்கு ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் நான்கு ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மதுபான விடுதி ஊழியரான மஸ்ரான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

Related News

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ

"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு: ஜூன் 15-ல் விசாரணை

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு: ஜூன் 15-ல் விசாரணை

4 மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

4 மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஊழல் புகார்களால்  தற்காப்பு  மற்றும் போலீஸ் துறை கொள்முதல் நிறுத்தி வைக்க முடிவு: பிரதமர்

ஊழல் புகார்களால் தற்காப்பு மற்றும் போலீஸ் துறை கொள்முதல் நிறுத்தி வைக்க முடிவு: பிரதமர்