கோலாலம்பூர், மார்ச்.02-
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, அபுதாபியில் உள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மூடப்பட்ட காலத்தில் தூதரக சேவைகளை நேரடியாகப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், அவசர நிலைகளுக்காக, தூதரக அதிகாரிகளைத் தொலைப்பேசி வாயிலாகவோ, மின்னஞ்சல்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மலேசியா வெளியிட்ட அறிக்கையில், போர் சூழல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும் மலேசியர்கள், மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தியது.
அதே வேளையில், அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பெற மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.








