Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உறவுக்காரப் பிள்ளையைச் சித்ரவதைச் செய்ததாக உணவக நடத்துநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உறவுக்காரப் பிள்ளையைச் சித்ரவதைச் செய்ததாக உணவக நடத்துநர் மீது குற்றச்சாட்டு

Share:

சுக்காய், ஜூன்.01-

தனது கண்காணிப்பில் விடப்பட்ட 15 வயது உறவுக்காரப் பெண்ணை, உடல் ரீதியாகக் காயப்படுத்தி, சிற்றவதைச் செய்து வந்ததாக உணவக நடத்துநரான பெண்மணி ஒருவர் திரெங்கானு, சுக்காய் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

52 வயதுடைய அந்தப் பெண்மணி நீதிபதி வான் ஷுஹைலா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே 22 ஆம் தேதி வரை சுக்காய், பிஞ்சாய் என்ற இடத்தில் உள்ள தனது உணவகத்தில் அந்த 15 வயதுப் பெண்ணைச் சிற்றவதைச் செய்து வந்ததாக அந்த பெண்மணிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்மணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News