Mar 31, 2026
Thisaigal NewsYouTube
கலவரத்தில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்,27-

புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நேற்று நடந்த மலேசிய கிண்ண இறுதிப் போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட சில கால்பந்து இரசிகர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹான்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களால், குடும்பத்துடன் மைதானத்திற்கு வரும் பிற ரசிகர்கள் அச்சமடைய வாய்ப்புள்ளது. இதனால் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பான சூழல் இல்லாத நிலை ஏற்படும். எனவே, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இது கால்பந்து விளையாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவரும் விளையாட்டை அமைதியாக இரசிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

Related News

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்