Feb 2, 2026
Thisaigal NewsYouTube
ஆய்வு செய்ய ஏன் பயப்பட வேண்டும்?" - ஹன்னா இயோ கேள்வி
தற்போதைய செய்திகள்

ஆய்வு செய்ய ஏன் பயப்பட வேண்டும்?" - ஹன்னா இயோ கேள்வி

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.02-

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஊராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய தனது அமைச்சுக்கு உத்தரவிட்டதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ பதிலளித்துள்ளார்.

உயர்கல்வி என்பது வெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் அல்ல, ஒரு சிக்கலை ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொள்வதற்காகவே என்று அவர் விளக்கினார்.

நாம் ஒரு சரியான மற்றும் உறுதியான முடிவை எடுக்க விரும்பினால், அதற்குத் துல்லியமான தரவுகளும் உண்மைகளும் தேவை. அதனால்தான் எனது சட்டப் படிப்பின் போது நான் கற்ற ஒவ்வொரு பாடத்தையும் மதிக்கிறேன். அங்குதான் ஒரு கொள்கையின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ள நான் கற்றுக் கொண்டேன் என்று அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு விஷயத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், தேவையற்ற பணிகளில் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவதைத் தவிர்க்கலாம் என்றும், தவறுகளைக் குறைத்து மிகவும் கவனமாக முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Related News