பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5-
பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி தலைமையில் இந்தியர்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள உரிமைக் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS நிராரித்துள்ளது.
சங்கங்களின் பதிவு அலுவலகத்தின் இந்த முடிவை எடுத்து அடுத்த 30 நாட்களுக்குள் உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயிலிடம் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையை கட்சியின் சட்டக்குழு மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
தங்களின் உரிமைக் கட்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார். .








