புத்ராஜெயா, ஜூலை 03-
மேற்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், அங்கு தங்கியிருப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ள மலேசியர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதரங்களில் தங்கள் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மலேசியர்களை தூதரகப் பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக அவர்களின் பெயர் பதிவு மிக அவசியமாகும் ம் என்று அது குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலவரங்களையும் விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.








