Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சீன அதிபர் ஸி ஜின்பிங் மலேசிய வருகை பிராந்திய உறவுகளை மேம்படுத்தும்
தற்போதைய செய்திகள்

சீன அதிபர் ஸி ஜின்பிங் மலேசிய வருகை பிராந்திய உறவுகளை மேம்படுத்தும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

மலேசியாவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வருகையானது, இரு வழி வர்த்தகப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் என்பதுடன், பிராந்திய உறவுகளை மேம்படுத்தும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகை, மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தைப் பெரியளவில் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

மலேசியாவின் முக்கிய வர்த்தகச் சகாவாக சீனா திகழும் அதே வேளையில், இவ்வாண்டில் ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்று இருப்பதால் பிராந்திய அளவிலான ஈடுபாடுகள் குறித்து விவாதிப்பதற்கு நிறைய விவகாரங்கள் உண்டு என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரையில் மூன்று நாள் மலேசியாவிற்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் புதிய வரி காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடித்து இருக்கிறது.

இந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கின் மலேசிய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்