Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது கார் மோதியதில் நபர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது கார் மோதியதில் நபர் உயிரிழந்தார்

Share:

டிச. 29-

RAUBஇல் இருந்து Mempaga செல்லும் சாலையில், Lingkaran Tengah Utama அருகே 12வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது கார் மோதியதில் Muhammad Faris Kamari என்ற 34 வயது நபர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது என பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைவர் Superintenden Zaiham Mohd Kahar தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கார் கிளாந்தானில் இருந்து மலாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் மீது மோதியுள்ளது என்று Zaiham தெரிவித்தார். உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயமடைந்த குடும்பத்தினரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்