Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அதிவேகமாக மிதிக்கப்பட்ட ஆக்சிலரேட்டர்: கோலாலம்பூரில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்
தற்போதைய செய்திகள்

அதிவேகமாக மிதிக்கப்பட்ட ஆக்சிலரேட்டர்: கோலாலம்பூரில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்

Share:

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் டோயோட்டா அல்மேரா ரக கார் ஒன்றை ஓட்டி வந்த 28 வயது உள்ளூர் ஆடவர், வளைவு ஒன்றில் திரும்பும்போது தவறுதலாக எண்ணெய் பெடலை பலமாக மிதித்ததில் கார் விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஹோண்டா சிவிக் கார் மற்றும் அங்கிருந்த வேலி மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இரு காரின் ஓட்டுநர்களுக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட மதுபானம் மற்றும் போதைப்பொருள் சோதனைகளில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை தலைவர் முகமட் ஜம்சுரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related News