சிலாங்கூர், சுங்கை பூலோ, பண்டார் சௌஜானா பெர்டானாவில் நேற்று காலை சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள நீர்நிலை கோபுரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 24 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை சுமார் 11:50 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவர் கோபுரத்தின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








