Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் முன்கூட்டியே தொடங்கிய கடும் வெயில்: வட மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் முன்கூட்டியே தொடங்கிய கடும் வெயில்: வட மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

மலேசியாவில் வட மாநிலங்களிலும் கிழக்குக் கரை மாநிலங்களிலும் தற்போது நிலவும் வறண்ட வானிலை, வடகிழக்கு பருவ மழையி இறுதிக் கட்டத்தில் ஏற்படும் வழக்கமான நிகழ்வு என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் – மெட்மலேசியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடைக் காலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும், இது தெற்கு அரைக்கோளத்தில் தீவிரமாக இருக்கும் லா நீனா நிகழ்வின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து காணப்படும் வேளையில், சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 34 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடனும் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!