Apr 3, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியிடம் நாளை விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியிடம் நாளை விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.12-

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், வியாழக்கிழமை விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் வியாழக்கிழமை இஸ்மாயில் சப்ரி விசாணைக்கு ஆஜராகும் நிலையில், அதன் பின்னர் மேலும் சில விசாரணைகள் நடைபெறும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இஸ்மாயில் சப்ரியின் இன்றைய உடல் நிலையைப் பொறுத்தே அவர், விசாரணைக்கு ஆஜராக முடியுமா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related News