Aug 11, 2026
Thisaigal NewsYouTube
கைரி ஜமாலுடினுக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு
தற்போதைய செய்திகள்

கைரி ஜமாலுடினுக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.18-

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாக வழங்கும்படி சமயப் போதகர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகச் சேவையாற்றி வந்த காலத்தில், கோவிட் 19 நோய் பரவல் தொடர்பிலான தடுப்பூசியின் உண்மை நிலை குறித்து அவர் பொய்யுரைத்துள்ளதாக ஒரு சமயப் போதகரான ரஷிக் அல்வி என்பவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த சமயப் போதகருக்கு எதிராக கைரி ஜமாலுடின் அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.

இந்த அவதூறு வழக்கு விசாரணையில் அந்த தடுப்பூசியின் தன்மை குறித்து சுகாதார அமைச்சர் என்ற முறையில் கைரி ஜமாலுடின் பொய்யுரைக்கவில்லை என்றும், உண்மை நிலையைத்தான் விளக்கினார் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் ஷா ராஜா மோஹ்ஸான் அஹ்மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் கைரியின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அந்த சமயப் போதகருக்கு நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் உத்தரவிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி