பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மசீச. சதி செயலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சியின் தேசியத் தலைவர், டாக்டர் வீ கா சியோங் மறுத்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், இதில் உண்மை இல்லை என்றும் வீ கா சியோங் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
அன்வாரின் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாமல், ஓரங்கட்டப்பட்ட கட்சியாக விளங்கும் மசீச, நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மறைமுக வேலைகளைச் செய்து வருவதாக செய்தி தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் கருத்துரைத்தார்.
அன்வாரை வீழ்த்துவதற்கு மசீச உண்மையிலேயே நோக்கம் கொண்டிருக்குமானால், அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குத் தனது இரண்டு எம். பிக்களின் ஆதரவைக் கட்சி வழங்கியிருக்காது என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா பாரு நீதிமன்ற தடுப்புக்காவலில் போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

நாட்டில் 5 மாதங்களில் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவு: விழிப்புணர்வு அதிகரிப்பதாக துணை அமைச்சர் தகவல்

மலேசியா – ரஷ்யா வர்த்தகம்: ரிங்கிட், ரூபிள் நாணயங்களை பயன்படுத்தத் திட்டம்

போர்ட் கிள்ளான் சுயேட்சை மண்டலத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் அந்தோணி லோக் தொடங்கி வைத்தார்

பேரப்பிள்ளைகளின் எண்களால் வந்த அதிர்ஷ்டம்: டோட்டோ ஜாக்பாட்டில் 11.8 மில்லியன் ரிங்கிட் வென்ற ஓய்வுபெற்ற முதியவர்!


