May 25, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச ஆடவர் சக நாட்டவரால் கொலை செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச ஆடவர் சக நாட்டவரால் கொலை செய்யப்பட்டார்

Share:

ஈப்போ , அக்டோபர் 10-

சக நாட்டவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பேரா, தெலுக் இந்தான், தமன் லாஜெண்டா பாசா 3 இல் ஒரு கொங்சி வீட்டில் இன்று காலை 5 மணியளவில் அந்த வங்காளதேசி இறந்து கிடந்தது தெரியவந்தது.

கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த அந்நிய ஆடவரின் நெஞ்சுப்பகுதியில் ஆழமானவெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த வங்காளதேசியுடன் ஒன்றாக தங்கியிருந்தவர்கள் என்று நம்பப்படும் 32 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல், சவப்பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டத்தோ அசிசி மேலும் கூறினார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்