Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச ஆடவர் சக நாட்டவரால் கொலை செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச ஆடவர் சக நாட்டவரால் கொலை செய்யப்பட்டார்

Share:

ஈப்போ , அக்டோபர் 10-

சக நாட்டவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பேரா, தெலுக் இந்தான், தமன் லாஜெண்டா பாசா 3 இல் ஒரு கொங்சி வீட்டில் இன்று காலை 5 மணியளவில் அந்த வங்காளதேசி இறந்து கிடந்தது தெரியவந்தது.

கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த அந்நிய ஆடவரின் நெஞ்சுப்பகுதியில் ஆழமானவெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த வங்காளதேசியுடன் ஒன்றாக தங்கியிருந்தவர்கள் என்று நம்பப்படும் 32 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல், சவப்பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டத்தோ அசிசி மேலும் கூறினார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு