Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பேங்காக் விமானப் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய நாட்டவர்
தற்போதைய செய்திகள்

பேங்காக் விமானப் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய நாட்டவர்

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.11-

இந்தியா, டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்ந்தது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்தது. துஷார் என்ற 24 வயதுடைய இந்தியப் பயணி, மது போதையில், இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து எழ அவர் முயன்றுள்ளார். அவரால், எழுந்திருக்க இயலாத நிலையில், நின்றவாறே, அருகில் அமர்ந்திருந்த ஜப்பானிய பயணி மீது சிறுநீர் கழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா AI 2336 என்ற விமானத்தின் வர்த்தக வகுப்பில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான அந்த ஜப்பானியப் பயணி, பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகினார். எனினும் அவருக்குத் தேவையான உதவிகளை ஏர் இந்தியா பணியாளர்கள் செய்தனர்.

விமானம் பேங்காக்கில் தரையிறங்கியதும், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆளான அந்த இந்தியப் பயணி, அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.

இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் இருந்த ஒரு பயணி, வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

பேங்காக் விமானப் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய நாட்டவர் | Thisaigal News