சபா, Beaufort மாவட்டத்தில் உள்ள கம்போங் வெஸ்டனில் (Kampung Weston) இன்று வியாழக்கிழமை மாலை மின்சாரம் தாக்கியதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மாலை 5.56 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக Beaufort தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஷாக் ஜாபாஸ் தெரிவித்தார். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், இந்த விபத்து குறித்த விரிவான தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, அடுத்தடுத்து புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.








