பத்து பஹாட், டிச. 26-
பேயைத் தேடுவதாக கூறி, கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவருக்கு ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.
24 வயது முகமட் ஹையிகால் மெஸ்ரோல் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் சுஹைய்லா ஷாபிபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி காலை 7.10 மணியளவில் பத்து பஹாட், புக்கிட் பாசீரில் உள்ள 66 வயது நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட கட்டத்தில் பேயை தேடி வந்ததாக கூறி, அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








