Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அந்த லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அந்த லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியை நோக்கி செல்லும் கெந்திங் செம்பா சாலையின் 27.8 ஆவது கிலோ மீட்டரில் நீண்ட டிரெய்லர் லோரி ஒன்று நேற்று தடம் புரண்ட சம்பவத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் ஆரிபின் முஹமட் நசீர் கூறினார்.

45 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், பகாங், லிப்பிஸைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டது.

“ அந்த லோரி ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செலாயாங் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சாலையில் ஈரமான நிலப்பரப்பு காரணமாக லோரி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக நூர் அரிஃபின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த லோரி, லிப்பிஸிலிருந்து கிள்ளானை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாக அவர் விவரித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு