Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நஜீப் தொடர்புடைய அரசாணை உத்தரவு விவகாரம் விவாதம் வேண்டாம் - பகாங் சுல்தான் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், பிப்.28-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் அரசாணை உத்தரவு தொடர்பில் விவாதம் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் தற்போது, சட்டப்பூர்வமாகக் கையாளப்பட்டு வருகிறது. அதனை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

அதேவேளையில் கூடுதல் அரசாணை உத்தரவைப் பொறுத்தவரையில், அது பொறுப்பான மற்றும் நம்பகமான தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. எனவே இவ்விவகாரத்தை ஆளுக்கு ஆள் விவாதிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுல்தான் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் 16 ஆவது மாமன்னராக பொறுப்பேற்று இருந்த சுல்தான் அப்துல்லா, தமது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்ட கூடுதல் அரசாணை உத்தரவின்படி நஜீப், தனது எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவ்விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை