ஜூலை 28-
மலேசிய இந்திய சமுகத்தின் வளர்ச்சி குறித்து மாமன்னர் Seri Paduka Baginda Sultan Ibrahim அதிக அக்கறை கொண்டுள்ளார் என வர்த்தகம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk R Ramanan கூறினார்.
மலேசிய இந்திய சமுகத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களை மாமன்னர் ஆழ்ந்து புரிதல் கொண்டுள்ளார் என்றும் அது தொடர்பான அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளை மாமன்னர் கவனித்து வருகிறார் என ரமணன் கூறினார்.
இந்திய சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் சமூக சிக்கல்கள மாமன்னர் தொடர்ந்து வருவதால், மலேசிய நாட்டில் இந்தியர்களின் எதிர்காலம் நிலைநாட்டப்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக துணை அமைச்சர் மேலும் கூறினார்.








