Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சொத்து விவரங்களை அறிவிப்பதில் பிரச்னை இல்லை
தற்போதைய செய்திகள்

சொத்து விவரங்களை அறிவிப்பதில் பிரச்னை இல்லை

Share:

துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாட்டின் துணைப் பிரதமராக தாம் பொறுப்பு வகித்து காலத்தில், சம்பாதித்த சொத்து விவரங்களை அம்பலப்படுத்துவதில், தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அண்மையில் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவித்த தனி நபர்களில் தாமும் ஒருவர் என்றும், இது தம்முடைய வெளிப்படையான போக்கை மக்களிடம் நிரூபிப்பதாக உள்ளது என்றும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் குறிப்பிட்டார்.

துன் மகாதீரைப் போல் தாம் அல்ல என்று குறிப்பிட்ட அன்வார், செகாம்பூட் இல் உள்ள தம்முடைய வீட்டின் விலை ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி என்பதை அண்மையில் தாம் வெளிப்படையாக அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதில் ரகசியம் காக்க ஒன்றும் இல்லை. பொது மக்கள் அறிந்த ஒன்றுதான் என்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்கா வில் மடானி மலேசியா நிகழ்வில் கலந்துகொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு