Mar 24, 2026
Thisaigal NewsYouTube
அரை முடமானவர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
தற்போதைய செய்திகள்

அரை முடமானவர் குளத்தில் மூழ்கி இறந்தார்.

Share:

போர்ட் டிக்சன்,ஜூலை 14

கடந்த ஜூலை 11 முதல் 13 ஆம் நாள் அரை பிறந்தநாள் கொண்டாட சென்ற 6 வரில் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமுற்றார். பக்கவாத நோயாளியான அந்த 34 வயது ஆடவர் தன் 5 நண்பர்களுடன் விடியல் காலை 2.00 மணிவரை நீச்சல் குளத்தில் நீந்தியுள்ளனர்.
தங்கும் விடுதியின் பணியாளர் பல முறை அந்த 6 பேர்களிடம் , இது நீச்சல் செய்வதற்கான தகுந்த நேரம் இல்லை என கூறியும் அதற்கு அவர்கள் செவிசாய்காமல் தொடந்து குளித்து வந்துள்ளதாக போர்ட் டிக்சன் வட்டாரா போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவித்தார்.

நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் பொழுது தனது பக்கவாத நண்பர் எந்தவொரு அசைவும் இல்லாது இருப்பதை உணர்ந்து அங்குள்ள அதிகாரிகள் போலீசார் மற்றும் மருத்துவ வண்டிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த பக்கவத நண்பர் மணி 4.35 மரண்முற்ற செய்தி போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேல் விசாரணைகளுக்காக 3 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் தடுத்து வைத்திருப்பதோடு அவர்கள் மீது எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதை பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் மீது கடிமையான குற்றபதிவு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News