Mar 15, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் கடத்தல் மன்னனை திரும்பக் கொண்டுவர எண்ணம் இல்லை !
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் மன்னனை திரும்பக் கொண்டுவர எண்ணம் இல்லை !

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் நாட்டிற்கு மீண்டும் கொண்டுவர காவல்துறை எண்ணம் கொண்டிருக்கவில்லை என காவல் துறையின் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

ஆதாரங்கள் போதுமான அளவில் இருக்கின்ற நிலையில், பேராவைச் சொந்த ஊராகக் கொண்ட அந்த 41 வயது ஆடவர் மீது அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட அந்த ஆடவர் லாவோஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு சட்டங்களை மீறிய மலேசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மலேசிய காவல் துறை அந்தந்த நாட்டிற்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக அயூப் கான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related News