கெடா, கூலிம் அருகில் ஜாலான் பாயூ பேருந்து நிறுத்தத்தில் இந்தோனேசிய மாது ஒருவர் இறந்து கிடந்தது இன்று காலை 10.05 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த இந்தோனேசிய மாது யார் என்பது இதுவரையில் அ டையாளம் காணப்படவில்லை என்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அஜிசுல் முகமது கைரி தெரிவித்தார்.
சவப்பரிசோதனைக்காக அந்த மாதுவின் பிரேதம், அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








