மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக சென்ற 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், நாய் மீது மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தம்பின், ஜாலான் கெரு - பத்து பெலாங் சாலையில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன் தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த கர்ப்பிணைப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.
35 வயதான அந்த மாது, ஜாலான் தம்பின் - ஜெமாஸ்சாலையில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து தம்பின், கம்போங் கெரு ஹுலு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


