மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக சென்ற 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், நாய் மீது மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தம்பின், ஜாலான் கெரு - பத்து பெலாங் சாலையில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன் தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த கர்ப்பிணைப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.
35 வயதான அந்த மாது, ஜாலான் தம்பின் - ஜெமாஸ்சாலையில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து தம்பின், கம்போங் கெரு ஹுலு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


