மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக சென்ற 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், நாய் மீது மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தம்பின், ஜாலான் கெரு - பத்து பெலாங் சாலையில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன் தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த கர்ப்பிணைப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.
35 வயதான அந்த மாது, ஜாலான் தம்பின் - ஜெமாஸ்சாலையில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து தம்பின், கம்போங் கெரு ஹுலு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


