Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்கார முயற்சித்த ஆடவர் வளைத்துப்பிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்கார முயற்சித்த ஆடவர் வளைத்துப்பிடிக்கப்பட்டார்

Share:

குளுவாங், டிச. 18-


பொது கழிப்பறையில் மாது ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிய முயற்சி செய்த ஆடவர் ஒருவரை பொது மக்கள் வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணியளவில் ஜோகூர், குளுவாங், லாமன் கிரேட்டிவ் கம்போங் மிலாயு என்ற இடத்தில் உள்ள பொது கழிப்பறையில் நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தனர்.

அப்பகுதியில் வர்த்தகம் நடத்திய வந்த 24 வயது மாது, பொது கழிப்பறையை பயன்படுத்த, நுழைந்த போது, அவரின் பின்னாலேயே தொடர்ந்து வந்த ஆசாமி ஒருவன், அவர் பயன்படுத்திய கழிப்பறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்து, கதவை தாழீட்டுக்கொண்டு, சத்தம் போட வேண்டாம் என்று அச்சுறுத்தியதாக ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.

தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த மாது, உரக்க கத்தி கூச்சலிட்டததைத் தொடர்ந்து அந்த பொது கழிப்பறையின் பிரதான கதவையும் அந்த நபர் பூட்டிக்கொண்டார்.

அந்த ஆசாமியிடம் சில நிமிடங்கள் கடுமையாக போராடிய அந்த மாது, சற்று பருமனான உடல் அ மைப்பைக் கொண்ட அந்த நபரை கீழே தள்ளி, சாய்த்து விட்டு, கதவை திறந்துக்கொண்டு, வெளியே ஓடி வந்த , பொது மக்களிடம் உதவிக் கோரி, கூச்சலிட்டதாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.

கீழே விழுந்த அந்த நபர், தட்டுதடுமாறி எழுந்து, கழிப்பறையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே கழிப்பறைக்குள் நுழைந்த பொது மக்கள், அந்த நபரை வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.

ஒரு வேலையற்ற நபரான 34 வயதுடைய அந்த நபருக்கு ஏற்கனகே 6 குற்றப்பதிவுகள் உள்ளன. கழிப்பறைக்குள் அந்த ஆசாமியுடன் போராடியதில் , அந்த மாது வாய் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த மாது வாயிலும் உடலிலும் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.

அந்த நபர், இன்று புதன்கிழமை காலையில் குளுவாங் மாஜிஸ்திரேட் நீதமின்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்